நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!
மத்திய அரசு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் தங்கள் ஆதாா் எண்ணை சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்களிடம் அடுத்த ஆண்டு ஏப்.1 அல்லது அதற்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியீடு
தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்காக, ‘தேர்தல் திருத்தச் சட்டம் – 2021’, கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்தல் நடைமுறையில் 4 முக்கிய நடைமுறைகளை சேர்ப்பதற்கான 4 அறிவிக்கைகளை சட்ட மந்திரி வெளியிட்டுள்ளார். அதாவது வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. அதன்படி, ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்
35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம், PF வட்டி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
.அடுத்து, ஆண்டுதோறும் ஜன.,1 ல் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர்.மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி திருத்தப்பட்ட வாக்காளா் பதிவு விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு தங்கள் ஆதாா் எண்ணை சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆதார் எண்ணை தெரிவிக்க புதிதாக ‘6பி’ என்ற படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், தோ்தல் விதிகள் திருத்தச் சட்டத்தின்படி ஆதாா் எண்ணை பகிர முடியாத நபா்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரைச் சோ்க்க விண்ணப்பித்தால், அவா்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது.
மேலும் 18 வயது பூர்த்தியானோர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஓராண்டு காத்திருக்க நேர்கிறது. அதனால் இனி, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில், 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகமாகிறது. இதனால் ஓராண்டில் நான்கு முறை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம்.மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக உறுப்பினர்கள், எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சேவைப் பிரிவு வாக்காளர்களாக கருதப்படுவர். அடுத்து, வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமையை அளிக்க, மனைவி என்ற சொல்லுக்கு பதிலாக துணைவர் என்ற சொல் பயன்படுத்தப்படும்.
Exams Daily Mobile App Download
இதனால், சேவைப் பிரிவினரில் கணவன் அல்லது மனைவி சார்பில் பரஸ்பரம் ஓட்டு போட முடியும்.இவற்றோடு, தேர்தல் தொடர்பான சாதனங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வைக்கவும், பாதுகாப்பு படையினர் தங்கவும் எந்த இடத்தையும் தேர்தல் கமிஷன் கோர, சட்டம் வகை செய்கிறது. இவ்வாறு தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.