ஆதார், பான் இணைப்பு – ஆப்லைனில் செய்வது எப்படி?
மத்திய அரசு ஆதார் மற்றும் பான் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. இதனை ஆப்லைன் மூலம் மிக எளிமையாக செய்து முடிக்கலாம். தற்போது அதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.
ஆதார் – பான் இணைப்பு:
மத்திய வருமான வரித்துறை நாட்டு மக்கள் அனைவரையும் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. மேலும் இதற்கு கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் என்று முதலில் அறிவித்தது. பின்பு ஆதார் மற்றும் பான் இணைப்பின் கால அவகாசத்தை நீட்டித்து. அதன்படி தற்போது அதற்கான கால அவகாசத்தை வருகிற ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பான் மற்றும் ஆதார் இணைக்கவில்லை எனில் ரூ.10,000 வரை அபராதம் மற்றும் பான் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தது. இதன் காரணமாக தற்போது நாட்டு மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் இணைத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் இணைத்து வருவதால் சில நேரங்களில் சர்வர் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக தற்போது ஆப்லைன் மூலம் ஆதார் பான் இணைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
ஆப்லைன் மூலம் ஆதார் பான் இணைப்பு வழிமுறை:
- முதலில் பயனாளர்கள் ஆதாரில் பதிவு செய்த போன் நம்பர் மூலம் மெசேஜ் பாக்சில் UIDPIN என்று டைப் செய்து சிறு இடைவெளி விட்டு ஆதார் மற்றும் பான் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
- அதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
- பின்பு ஆதார் மற்றும் பான் இணைப்பு கோரிக்கை சென்றுவிடும்.
Hello madam UIDPAN Or UIDPIN Which one is correct
Aadhar and pan