ஆதார், பான் கார்டு இணைக்க 2023 மார்ச் வரை இறுதி வாய்ப்பு – இணைக்கும் எளிய வழிமுறைகள்!
மத்திய அரசு ஆதார் அட்டையின் எண்களுடன் மற்ற அனைத்து ஆவணங்களையும் இணைத்து விட உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் இது பற்றி எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஆதார்- பான் இணைப்பு:
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய பான் எண்ணும், எல்பிஜி மானியம், உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற அரசாங்க திட்டங்களிலிருந்து பண பலன்களைப் பெற ஆதார் எண்ணும் பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக கொரோனா பரவல் ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் பலமுறை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இறுதியாக 2022 மார்ச் இறுதிக்குள் ஆதார் பான் இணைக்க தவறியவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அதனையும் மீறும் பட்சத்தில் 2023 மார்ச் 31 வரை கூடுதல் அபராதம் செலுத்தி இணைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவற விடும் நபர்களின் பான் கார்டு செயலிழந்து விடும் என்றும், அதன் அனைத்து செயல்பாடுகளும் ரத்து செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வாறு இணைப்பது என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ரயில்வேயின் அதிரடி முடிவு.. இனி இந்த வகுப்பில் பயணம் செய்ய முடியாது!
Exams Daily Mobile App Download
ஆதார் – பான் இணைப்பு வழிமுறைகள்:
- முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
- வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ஆதார் இணைப்பு’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது ஒரு புதிய பக்கத்தில் “நீங்கள் ஏற்கனவே இணைப்பு ஆதார் கோரிக்கையை சமர்ப்பித்திருந்தால் நிலையைக் காண இங்கே கிளிக் செய்க” என்று காண்பிக்கும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்கள் ஆதார்-பான் நிலை இணையதளத்தில் காண்பிக்கப்படும்.
- இதுவரை இணைக்காத நிலையில், பான்-ஆதார் அட்டையை இணைக்க அதே பக்கத்தில் கிடைக்கும் படிவத்தை நிரப்ப வேண்டும்.