பான், ஆதார் கார்டை இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
பயனர்கள் தங்களது பான் கார்டினை, ஆதார் எண்ணுடன் இணைக்க வருகிற ஜூன் 30ம் தேதி நாள் ஆகும். அதற்குள் இந்த இணைப்பை செய்யா விட்டால் பான் கார்டு செயல்படாது. மேலும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியாது என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பான் – ஆதார் இணைப்பு:
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துள்ளதால், பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்தது. முன்னதாக, காலக்கெடு மார்ச் 31 ஆக இருந்த நிலையில் கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், இரு ஆவணங்களையும் இணைக்க நீட்டிக்கப்பட்ட காலக்கெடு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. பயனர்கள் இதை செய்யத் தவறினால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும், மேலும் அவர்களின் பான் கார்டு செயல்படாது.
பழைய 5, 10 ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.30,000 வரை பெறலாம் – எப்படி தெரியுமா?
பான் கார்டு செயல்படாதவுடன், ஒரு நபர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. ஆதார் மற்றும் பான் அட்டை எண்கள் இரண்டும் பல்வேறு முக்கியமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய ஆதார் எண் பயன்படுத்தப்பட்டால், எல்பிஜி மானியம், உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற அரசாங்க திட்டங்களிலிருந்து பண பலன்களைப் பெற பான் பயன்படுத்தப்படுகிறது. பான் மற்றும் ஆதார் இணைக்க பல வழிகள் உள்ளன. ஒருவர் 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் அதை செய்யலாம்.
பான்-ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?
- வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளமான www.incometax.gov.in க்குச் செல்லுங்கள்.
- வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில், விரைவான இணைப்புகள் பிரிவின் கீழ், ‘இணைப்பு ஆதார்’ ஆப்சன் காண்பிக்கப்படும்.
- ‘இணைப்பு ஆதார்’ என்பதன் கீழ் உள்ள ‘உங்கள் ஆதார் பான் இணைக்கும் நிலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை உள்ளிடவும்.
- விவரங்களை பூர்த்தி செய்தவுடன், ‘இணைப்பு ஆதார் நிலையை காண்க’ என்பதைக் கிளிக் செய்க.
- உங்கள் ஆதார்-பான் நிலை இணையதளத்தில் காண்பிக்கப்படும்.