பான், ஆதார் இணைப்பிற்கு செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு – மத்திய அரசு!
பான் – ஆதார் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் அது தற்போது மேலும் 3 மாத காலம் அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னரும் இணைக்கத் தவறினால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
பான் – ஆதார் இணைப்பு:
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றின் 2வது அலையின் காரணமாக மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கொரோனா பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்துவதால் பிற பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதனால் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச்சான்று போன்றவை செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பான் – ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது.
தமிழகத்தில் தனியார் வங்கி காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
பிரிவு 139AA இன் படி, ஒவ்வொரு நபரும் தங்கள் வருமான வரி அறிக்கையில் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயமாகும். தற்போது வரி செலுத்துவோருக்கு ஜூன் 30 முதல் செப்டம்பர் 30 வரை பான் மற்றும் ஆதார் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன் பின்னரும் பான் மற்றும் ஆதார் இணைக்கத் தவறினால், பான் கார்டு செயல்படாது. பான் கார்டு செயல்படவில்லை என்றால் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாமல் போகலாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு – 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி!
மேலும் ஆதார் உடன் பான் இணைக்கப்படாவிட்டால் தாமத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, தற்போதைய நீட்டிப்புக்குப் பிறகு, ஒருவர் 30-09-2021 க்குள் பான்-ஆதார் இணைக்க முடியும், அவர் 30-09-2021 க்குள் பான்-ஆதாரை இணைக்கத் தவறினால், அவர் அதிகபட்சம் ரூ.1,000 தாமத கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் வருமான வரித்துறையின் அதிகாரப்பூரவ இணைய பக்கத்திற்கு சென்று பான் கார்டு – ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட்ட காலத்திற்குள் இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Deaf
259855984734