தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல் சேகரிப்பு – காவல்துறை புதிய உத்தரவு!
தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை உத்தரவு:
தமிழகம் முழுவதும் கட்டிட வேலை, பானிபூரி கடைகள், துணிக்கடைகள் என பல இடங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்கின்றனர். குறைவான சம்பளத்தில் அதிக நேரம் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்வதால் பல இடங்களில் அவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் எதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் வெளி மாநில தொழிலாளர்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் 6,503 பணியிடங்கள் – நேர்காணல் அழைப்பு கடிதம் வெளியீடு!
Exams Daily Mobile App Download
அதனால் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவலை சேகரிக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் பற்றி நிறுவனங்கள் காவல்துறையினருக்கு தகவல் தர வேண்டும் எனவும், வாடகைக்கு வீடு எடுக்கும் பிற மாநிலத்தவர் அல்லது மாணவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக காவல்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.