ஆதார் அட்டைதாரர்கள் மறந்தும் கூட இதை செய்யாதீங்க.. UIDAI வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதாரை நாம் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இது குறித்து அவ்வப்போது மத்திய ஆதார் அமைச்சகம் சில அறிவுரைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆதார் அட்டைதாரர்கள் இதனை செய்ய வேண்டாம் என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார்:
இந்தியாவில் ஆதார் முக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நம்முடைய பிறந்த தேதி, மொபைல் எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் தற்போது ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இன்றைய கால கட்டத்தில் ஆதார் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்து விட்டது. அந்த அளவிற்கு ஆதாரின் தேவை அதிகரித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இத்தகைய ஆதாரை நாம் எப்பொழுதும் அப்டேட்டாகவும், பத்திரமாகவும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆதாரை வைத்து நிறைய மோசடிகள் நடைபெற்று வருகிறது. எனவே தெரியாத நபர்கள் கையில் ஆதார் கார்டு கிடைக்கும் படி அலட்சியமாக இருக்க கூடாது. மேலும் அவ்வப்போது ஆதார் அமைச்சகம் ஆதார் அட்டை தாரர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் காரர்களுக்கும் ரூ.1000 பரிசு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அத்துடன் சில எச்சரிக்கைகளையும் விடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையை எந்த விதத்திலும் சேதபடுத்த கூடாது என்று UIDAI தெரிவித்துள்ளது. ஏனெனில் நீங்கள் சேதப்படுத்தும் போது அதில் உள்ள QR கோட் செயலிழந்து போய் விடும். அந்த QR கோட் இருந்தால் மட்டுமே ஆதாரின் உண்மை தன்மையை அறிய முடியும். அதனால் ஆதாரை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் என UIDAI எச்சரித்துள்ளது.