தமிழக மக்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு – 100 யூனிட் மின்சாரம் நிறுத்தம்!
தமிழக அரசின் மின்சார வாரியம் மிகப்பெரிய கடன் சுமையில் இருந்து வரும் நிலையில், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார். அது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
மின்சார கட்டணம்:
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, மின்சார வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் மிகுந்த கடன் சுமையில் இருந்து வருவதால் மத்திய அரசு பல முறை மின்சார கட்டணத்தை உயர்த்த சொல்லி கடிதம் எழுதியது. அதனை தொடர்ந்து மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சார கட்டணம் மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் மின்சார அளவீடு செய்ய வரும் கணக்கீட்டாளர்களிடம் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார். மேலும் விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
இந்நிலையில் அது குறித்த எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி மின்சார துறையில் இருந்து மின் அளவீடு கணக்கீட வரும் பணியாளர்கள் எந்த அறிவிப்பும் இன்றி ஒரு விண்ணப்பத்தை கொடுத்து கையெழுத்து போட சொன்னால் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். காரணம் 100 யூனிட் இலவச மின்சாரத்தை சொல்லாமல் அவர்கள் நிறுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி இருக்கின்றனர்.