கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க தொடரப்பட்ட வழக்கில் திருப்பம் – வழக்கு நாளை ஒத்திவைப்பு!

0
கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க தொடரப்பட்ட வழக்கில் திருப்பம் - வழக்கு நாளை ஒத்திவைப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க தொடரப்பட்ட வழக்கில் திருப்பம் - வழக்கு நாளை ஒத்திவைப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க தொடரப்பட்ட வழக்கில் திருப்பம் – வழக்கு நாளை ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை மறுகூறாய்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் முக்கிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான செய்திகளை இப்பதிவில் காண்போம்.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் என்னும் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13ம் தேதி பள்ளி விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறைக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது ஒரு சில நாட்களில் கலவரமாக உருவெடுத்தது. இதன் காரணமாக பள்ளிகளில் உள்ள அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் மாணவியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறி ஸ்ரீமதியின் உடலை மறு கூராய்விற்கு அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி மறுகூறாய்வுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை !

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடலை பெற்றோர் வாங்க அனுமதி கோரும் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். அனைத்து நடைமுறைகளும் சரியான முறையில் நடைபெற்றதாக அரசு தரப்பு வாதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வலியுறுத்தி நாளை காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!