மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு உத்தரவு – அரசின் திடீர் அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹனுமங்கரின் பத்ரா நகரில் பசுவதை செய்யப்பட்டதன் காரணமாக அங்குள்ள பகுதி முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதனால், அந்த பகுதி முழுக்க பதட்டமான சூழல் நிலவி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள சிரியா காந்தி பஞ்சாயத்து மற்றும் காந்தி பாடி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 11 ஆம் தேதியன்று ஈத் பண்டிகையின் போது ஆடுகளுடன் சேர்த்து மாடுகளையும் கொன்றுள்ளனர். இந்த தகவலறிந்து சிரியா காந்தி கிராமத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாடுகளை கொன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், அந்த கிராமத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தடுக்க முயன்ற போலீசார் மீது கற்கள் வீசி கிராமத்தினர்கள் தாக்குதல் செய்தனர்.
Exams Daily Mobile App Download
மேலும், பசு வதை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர். அதாவது, பசுவதைக் குற்றச்சாட்டின் கீழ் நான்கு முக்கிய குற்றவாளிகளான ஃபரூக், அன்வர், அமீன் கான் மற்றும் சிக்கந்தர் கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுவரைக்கும் கலவரத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் நாளை (ஜூலை 29) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு
மேலும், சந்தேகத்தின் பேரில் பலரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை தடுக்க முயன்றனர். நீண்ட கலவரத்திற்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர். இருந்தாலும் கூட ஹனுமங்கரின் பத்ரா நகரில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால், நேற்று முழுவதும் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கரின் பத்ரா நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக ஹனுமங்கரின் பத்ரா நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.