ரேஷன் கார்டு இருக்கா? தீபாவளிக்கு உங்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வரப்போகும் சிறப்பு தொகுப்பு!
வரும் 24 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு தற்போது வரை ஒரு சில மாநில அரசுகள் சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.
சிறப்பு தொகுப்பு:
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை அக்டோபர் இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரும். இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாட இருக்கிறது. அனைவரையும் போன்று ஏழை எளிய மக்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மகாராஷ்டிரா அரசு ரூ.100 மதிப்புள்ள சிறப்பு தொகுப்பை ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்க உள்ளது.
இது அம்மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக அந்த மாநில அரசு சுமார் ரூ.513 கோடி ரூபாய்யை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்கள் பயன்பெற உள்ளனர். அதோடு மகாராஷ்டிரா அரசு மூன்றாம் பாலினத்தவரும் எளிய முறையில் ரேஷன் கார்டு பெறும் வகையில் சட்டங்களை வகுத்துள்ளது. இதற்கு அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் வைத்து இருந்தால் போதுமானது.
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்! வரவுள்ள சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள 50% மூன்றாம் பாலினத்தவர்கள் ரேஷன் கார்டுகளை விரைவில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகாராஷ்டிரா அரசின் தீபாவளி சிறப்பு தொகுப்பு அறிவிப்பால் மற்ற மாநில அரசு மக்களும் தங்கள் அரசும் தீபாவளிக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிடுமா என்று காத்துகொண்டு உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Give good rice taking 50percent of money then see how many people are purchasing. To Tamilnadu govt.