Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி தரும் சூப்பரான திட்டம் – முழு விவரம் இதோ!

0
Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி தரும் சூப்பரான திட்டம் - முழு விவரம் இதோ!
Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி தரும் சூப்பரான திட்டம் - முழு விவரம் இதோ!
Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டி தரும் சூப்பரான திட்டம் – முழு விவரம் இதோ!

பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை காட்டிலும், முதலீட்டிற்கு பாதுகாப்பு தரும் திட்டங்களில் பணத்தை செலுத்த பலரும் விரும்புகின்றனர். அதுபோன்ற திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது ஒரு வரையறுக்கப்பட்ட வருவாயை கொண்ட முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டம் குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேசிய சேமிப்பு மாதாந்திர பராமரிப்பு திட்டம்:

தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை, ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாகத் திறக்கலாம். இது ஒரு சேமிப்பு பத்திரத் திட்டம், இதன் முதன்மை நோக்கம் என்பது, சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை, முதலீடு செய்ய வைப்பது தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மத்திய அரசு 6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இது மற்ற வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு நிதி திட்டங்களில் வழங்கப்படும் வட்டியை காட்டிலும் அதிகமாகும்.

Exams Daily Mobile App Download

மேலும் வருவமான வரி பிரிவு 80 C இன் கீழ் வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தபால் அலுவலக நீண்ட கால வைப்பு நிதிகள் போன்ற சில நிலையான வருமான கருவிகளைப் போல, தேசிய சேமிப்பு சான்றிதழ், உத்தரவாதமான வட்டி மற்றும் முழுமையான மூலதன பாதுகாப்பை வழங்குகிறது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வரி சேமிப்பு திட்டங்களில், தேசிய சேமிப்பு சான்றிதழ் முதன்மையானது. இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தப்பட்ச தொகை ரூ.1,000 ஆகும். அதன்பின்னர் வைப்புத் தொகை ஆயிரம் மடங்குகளில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் செஸ் போட்டியை தொடர்ந்து ஆசிய கடற்கரை விளையாட்டு? பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஒரு கணக்கிற்கு அதிகபட்ச முதலீடு ரூ.4.5 லட்சம் ஆகும். கூட்டுக் கணக்கிற்கு ரூ.9 லட்சமாக இருக்கும். அந்த வகையில், ஒரு தனிநபரின் அதிகப்பட்ச வைப்புத் தொகை ரூ.4.5 லட்சம் ஆகும். கூட்டுக் கணக்கில் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் சமமான பங்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு முதலீட்டாளர், தன்னுடைய குழந்தைகள் உட்பட எந்தவொரு குடும்ப உறுப்பினரையும் நாமினியாக பரிந்துரைக்கலாம். இதனால் முதலீட்டாளரின் எதிர்பாராத இறப்பு நிகழும் போது, அவருடைய நாமினி அந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு முதலீட்டாளர், இந்த திட்டம் முதிர்ச்சி அடையும் போது, அதில் சேர்ந்து உள்ள, முழு தொகையையும் பெற்று கொள்ளலாம். ஒருவர் உச்ச வரம்பான ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.2475 வட்டியாக கிடைக்கும். இந்த வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அஞ்சலகத்தில் இதில் முதலீடு செய்ய விரும்பும் நபர் குழந்தையாக இருந்தால் பாதுகாவலர் ஒருவரால் இந்தக் கணக்கை தொடங்க முடியும். அதே நேரத்தில் 10 வயதை கடந்தால் தனி கணக்காக தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!