ஆவின் தயிர், நெய் விலை திடீர் உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழ்நாடு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிலையில் தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது
தயிர், நெய் விலை திடீர் உயர்வு:
தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என அழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் அதன் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வெளிச்சந்தையை ஒப்பிடும்போது, தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, பொதுமக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள், ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்களையே வாங்கி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், ஆவின் விற்பனை நிலையங்களில் தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை வித்தித்தால், ஆவின் நிர்வாகம் இந்த விலை உயர்வை அறிவித்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பான நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஆவின் பொருட்களின் விலை உயர்வு மக்களை அதிக அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அனைத்து பள்ளிகளையும் ஜூலை 24 வரை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!
தயிர் 100 கிராம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூ.100 ல் இருந்து ரூ.120 ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535 ல் இருந்து ரூ.580 ஆகவும், 500 மிலி ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்கிறது. ஒரு லிட்டர் நெய்-க்கு ரூ.50, ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. மேலும் ஆவின் பிரிமியம் கப் தயிர் ரூ.40 லிருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து 200மிலி பாக்கெட் லஸ்ஸி ரூ.20, புரோபயோடிக் லஸ்ஸி ரூ.27 லிருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15 லிருந்து ரூ.18 ஆகவும், 200 மிலி மோர் பாட்டில் ரூ.10 லிருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் 50 கிராம் தயிர் விலையில் மாற்றமில்லாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.