இந்தியாவில் தீவிரமாய் பரவும் விசித்திர நோய் – அச்சத்தில் பொதுமக்கள்!
குரங்கம்மை, காலரா போன்ற தொற்று நோயை தொடர்ந்து தற்போது கால்நடைகளை தாக்கும் புதிய வகை நோய் பரவி கொண்டிருக்கிறது. இந்த நோய் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
விசித்திர நோய்:
தற்போது இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பல மாநிலங்களில் குரங்கம்மை, காலரா போன்ற நோய்கள் பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் தோல் கழலை நோய் அல்லது லம்பி தோல் நோய் ( எல்.எஸ்.டி ) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு பல பசுக்கள் மற்றும் எருமைகள் உயிரிழந்துள்ளனர். இதுவரைக்கும் குஜராத் மாநிலத்தில் 1200 கால்நடைகள் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், மற்ற கால்நடைகளுக்கும் இந்த தொற்று பரவி விட கூடாது என்பதற்காக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – இந்த வாரத்தில் வெளியாகும் அறிவிப்பு?
அதாவது, குஜராத் மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. அதிலும் முக்கியமாக கட்ச், ஜாம்நகர், தேவ பூமி துவாரகா, ராஜ்கோட், போர்பந்தர், சூரத், ஆரவல்லி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பாதுகாப்பு நடவடிக்கையாக விலங்குகளை ஒரே இடத்தில் வைக்க வேண்டாம் எனவும், நோய் பாதித்த கால்நடைகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும், கால்நடைகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள 1700க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகள் தோல் கழலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், குஜராத் மாநிலம் முழுவதும் 122 கால்நடை மருத்துவ அதிகாரிகள் மற்றும் 568 கால்நடை ஆய்வாளர்கள் இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான திருச்சி சிவா இந்த விசித்திர நோயை கண்டு மனம் வருந்தியுள்ளார்.