வங்கக்கடலில் உருவாகும் புயல் – தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை! மக்களுக்கு எச்சரிக்கை!

0
வங்கக்கடலில் உருவாகும் புயல் - தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு
வங்கக்கடலில் உருவாகும் புயல் - தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு

வங்கக்கடலில் உருவாகும் புயல் – தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை! மக்களுக்கு எச்சரிக்கை!

கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில்‌ நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ புயலாக வலுபெறக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அக். 27ம்தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இன்று தென் கிழக்கு மற்றும்‌ மத்துய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. ஓரிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வுகளிலும் ‘தமிழ் மொழித்தேர்வு’ கட்டாயம் – அரசாணை வெளியீடு!!

அதனை தொடர்ந்து நாளை மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும் வடக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல்‌ 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேலும் அக்.25 அன்று வடக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல்‌ 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 110 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!