தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு – அக்.08 குறைதீர்ப்பு முகாம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை அளிக்கும் நோக்கில் குறைகளை கண்டறிய குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்த குடும்ப அட்டை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழக ரேஷன் கடைகளில் செயல்பாட்டில் இருக்கும் பயோமெட்ரிக் முறையில் பல இடர்பாடுகள் இருப்பதால் இதற்கு மாற்றாக கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடந்து இலவச வைபை வசதி விரைவில் கொண்டு வரப்படும். இதன் மூலம் ரேஷன் கடை பகுதியில் உள்ளோர்களும் இணைய வசதியை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அக்.8-ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் புதியதாக இத்தனை பூங்காக்களா? கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்!!
Exams Daily Mobile App Download
இந்த முகாமில் கடைகளின் செயல்பாடுகள், உங்களுக்கு உள்ள இடர்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் பதிவு மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதோடு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், நகல் குடும்ப அட்டை கோரியும் மனுக்கள் அளிக்கலாம். குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்