மாணவியின் தலைமுடியை வெட்டிய பள்ளியின் அதிபர்…ரத்து செய்யப்பட்ட உரிமம்.. அதிர்ச்சி சம்பவம்!

0
மாணவியின் தலைமுடியை வெட்டிய பள்ளியின் அதிபர்...ரத்து செய்யப்பட்ட உரிமம்.. அதிர்ச்சி சம்பவம்!
மாணவியின் தலைமுடியை வெட்டிய பள்ளியின் அதிபர்...ரத்து செய்யப்பட்ட உரிமம்.. அதிர்ச்சி சம்பவம்!
மாணவியின் தலைமுடியை வெட்டிய பள்ளியின் அதிபர்…ரத்து செய்யப்பட்ட உரிமம்.. அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில், அந்த பள்ளியின் அதிபர் மாணவியின் தலைமுடியை வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்:

குழந்தைகள் சமூக ஒழுக்கங்களையும், பண்பாட்டையும், அதனுடன் இணைந்த எதிர்கால நல்வாழ்விற்கான அறிவை வளர்க்கும் கல்வியை பெற வேண்டும் என்று தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். பள்ளியில் ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை தான் குடும்பத்தினரை தவிர்த்து குழந்தைகள் அதிக நேரம் பார்த்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகள் மாணவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் அரசுகள் பள்ளியின் அதிபர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்து அவற்றை பின்பற்ற அறிவுறுத்துகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பள்ளியின் அதிபர் மாணவிகள் கண்டிப்பாக 2 சடை பின்னல்களுடன் தான் பள்ளிக்கு வர வேண்டும் என்று விதிமுறையை கூறியுள்ளார். ஆனால் 9ம் வகுப்பில் பயிலும் மாணவி 1 சடை பின்னலுடன் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பள்ளியின் அதிபர் மாணவியின் தலை முடியை வெட்டியுள்ளார். அதனுடன் மாணவியையும் அடித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்வு – அரசாணை வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதனால் மாணவியின் பெற்றோர் பள்ளியின் அதிபர் மீது காவல்துறையில் புகார் செய்துள்ளனர். காவல் துறையினர் பள்ளியின் அதிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர், ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். மேலும், பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி அதிபர் இது போன்று பல முறை மாணவியிடம் நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள காவல்துறை அதிகாரி, பள்ளி அதிபர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறோம். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிள்ளார். கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய பள்ளியின் அதிபர் இது போன்று நடந்து கொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!