தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கு தனி சட்டம்? கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!

1
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கு தனி சட்டம்? கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கு தனி சட்டம்? கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கு தனி சட்டம்? கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கு தனி சட்டம்? கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!

தமிழகத்தில் அரசு, மற்றும் தனியார் பள்ளிகள், ஆசிரியர்கள் பாதுகாப்பிற்காக புதிய திட்டம் அறிமுகப் படுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.

புதிய திட்டம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்களும் கலவரங்களும் நடந்தன. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஸ்ரீமதியின் உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் மாணவியின் உறவினர்களும், பல்வேறு மாணவர் தரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் காவல் துறை 144 தடை உத்தரவு பிறப்பித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.

Exams Daily Mobile App Download

மேலும் கலவரத்தின் போது பள்ளிக்குள் சென்ற போராட்டக்காரர்கள் பள்ளியில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், மேஜைகள் பள்ளி வாகனங்கள் போன்றவற்றை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பள்ளியில் பயின்ற 4500 பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாகின. பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நேற்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இல்லை எனில் வேறு பள்ளிகளில் கல்வியை தொடர வழி ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நாளை ஜூலை 22ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான மன அழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்துவதை கைவிட வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமையாகும். இது போன்ற சம்பவங்கள் தனியார் பள்ளிகளில் இனிமேல் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் முதல்வரிடம் ஆலோசித்து கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!