தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களில் தனிக்குழு – அரசு வெளியிட்ட அரசாணை!
தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக தனிக்குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தகவல்களை விரிவாக பார்ப்போம்.
ஊழியர்கள் கவனத்திற்கு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் 12ம் தேதி அன்று குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் கலந்து கொண்டு தலைமையேற்று நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கென்று பொதுவான நிலையாணை (Common Standing Order) அமைத்திட ஒரு குழு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் 37 நிலையாணைகளுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் அனைவரும் முதன்மை தொழிலாளர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி அன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தாவது, ஷரத்து (36) தமிழ் மற்றும் ஆங்கிலம் நிலையாணை நகல்கள் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் வழங்கப் பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சரத்து (28) தொழிற் இடமாற்றம் என்பதை நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீர்ப்பை தமிழக அரசு ஆராய வேண்டும் என்று போக்குவரத்துக் கழக வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கும்? Airtel நிறுவனம் அறிவிப்பு
மேற்கண்ட அறிவுறுத்தலை, தமிழக போக்குவரத்துத்துறை தொழிற்சங்கங்களும் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி தமிழகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தற்போது உள்ள பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இக்குழு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.