தீபாவளியால் பாதிப்பிற்கு உள்ளான புதுச்சேரி – மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கை!
கடந்த திங்கள் அன்று தான் தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில், புதுவையில் காற்று மற்றும் இரைச்சலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாடு:
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்று அதிக மாசு அடைந்து நகர் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது வாகன போக்குவரத்துகளின் பயன்பாட்டை குறைப்பதற்காக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையும் அனுமதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தான் தீபாவளி பண்டிகை முடிந்துள்ளது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் காரணமாக புதுச்சேரி முழுவதும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. புதுவையின் முக்கிய பகுதிகளான ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டது.
SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு – உங்களுக்காக சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!!
Follow our Instagram for more Latest Updates
ஆய்வின் முடிவில் PM (10) மற்றும் PM (2.5) அளவுகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், புதுவையின் இரைச்சல் மாசு ஆனது, பல பகுதிகளிலும் 22 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த அளவுகள் முந்தையை அளவுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக இருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.