தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு பயன் பெரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது. நாளை ஏப்ரல் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாக கொரோனா காரணமாக எந்த ஒரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படாமல் இருந்தனர். அதனால் படித்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்தனர். இந்த வருடம் கொரோனா அச்சம் குறைந்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையில்லா திண்டாடத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. ஒரு மனிதர்களுக்கு வேலை என்பது அத்தியாவசிய ஒன்று. அது இல்லை என்றால் மனிதர்களின் நிலை மிக மோசமாகி விடும்.
EPF சந்தாதாரர்களுக்கு அரிய வாய்ப்பு – ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பு ரூ.21000 ஆக உயர்வு?
தற்போது என்.ஜி.எம்., கல்லூரியில் காலை, 9:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும் முகாமில், முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி உள்ளவர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன. பொள்ளாச்சி தெற்கு வட்டாரம் மற்றும் சுற்றுப்பகுதியில் வசிக்கும், வேலையற்ற படித்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம். எட்டாம் வகுப்பு, தொழில்நுட்ப கல்வி, பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கு, ஐ.டி., தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல், கட்டுமானம், கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று முகாமில் பங்கேற்க இருக்கும் இளைஞர்கள் அனைவரும் தங்களது பயோடேட்டா, அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ESIC மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.67,700/-
பொள்ளாச்சியில், நாளை (20ம் தேதி) நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில், வேலையில்லா இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் சார்பில், பொள்ளாச்சி தெற்கு வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.