மத்திய அரசின் குரூப் B & C தேர்வு – தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! வெற்றி நிச்சயம்!

0
மத்திய அரசின் குரூப் B & C தேர்வு - தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! வெற்றி நிச்சயம்!
மத்திய அரசின் குரூப் B & C தேர்வு - தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! வெற்றி நிச்சயம்!
மத்திய அரசின் குரூப் B & C தேர்வு – தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! வெற்றி நிச்சயம்!

இந்தியாவில் மத்திய அரசின் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு ‘பி’ மற்றும் ‘சி’ போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வில் பங்கேற்க உள்ள தமிழக மாணவர்களுக்கு மாநில அரசு இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குரூப் B & C தேர்வு:

இந்தியாவில் மத்திய அரசு தனது துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பி’ மற்றும் ‘சி’ போட்டித்தேர்வுகள் மூலம் தேர்தெடுத்து வருகிறது. நடப்பு ஆண்டு சுமார் 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் C பிரிவு பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த தேர்வின் நிலை 1-இல் பொது நுண்ணறிவு, பொது விழிப்புணர்வு, ஆங்கிலம் போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். அதே போல நிலை 2-இல் கணிதத் திறன், ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இந்த போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தால் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியை மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்துகிறது.

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை! ரூ.243 கோடி ஒதுக்கீடு!

Exams Daily Mobile App Download

இதனையடுத்து அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு அக்டோபர் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. இந்த கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனால் போட்டித் தேர்வு எழுத ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். ஒரு வேளை நேரில் வர இயலாதவர்கள் இணையதளம் மூலமும் கருத்தரங்கை காணலாம். அத்துடன் இந்த கருத்தரங்கு அரசு கேபிள் டி.வி.யிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!