விரைவில் அம்மா அப்பாவாக இருக்கும் பிரபல சீரியல் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து காதலித்து திருமணம் கொண்ட அபி நவ்யா மற்றும் தீபக் ஜோடி, தற்போது இருவரும் பெற்றோர்களாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர்.
தீபக் – அபி நவ்யா:
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தீபக் மற்றும் அபி நவ்யா ஜோடி பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். முதலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அபி நவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான கயல் சீரியலில் அவர் நடித்து வருகிறார். மேலும் பல சீரியல்களில் முக்கிய ரோலில் அவர் நடித்து வருகிறார்.
மேலும் தீபக் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் முடிந்தும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அபி நவ்யா பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு இருக்கிறார். அதாவது இருவரும் தங்களின் காதலின் அர்த்தமாக விரைவில் குழந்தைக்கு அப்பா அம்மாவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அட கடவுளே.. ஆல்யா மானசா கேரியரே போயிடும் போலயே.. கோட்டை விட்ட சீரியல் நடிகை – ரசிகர்கள் கவலை!
Exams Daily Mobile App Download
அபி நவ்யா தன்னுடைய அழகான கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இந்த செய்தியை சொல்லி இருக்கிறார். இந்த அழகான ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது சின்னத்திரை நடிகைகள் பலர் குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கும் நிலையில் அந்த வரிசையில் அபி நவ்யாவும் இணைந்து இருக்கிறார். அவர் தொடர்ந்து கயல் சீரியலில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.