டெல்டா & ஓமிக்ரானின் கலவையால் உருவான புதிய ‘டெல்டாக்ரான்’ வைரஸ் – அச்சுறுத்தும் வைரஸின் தன்மை!
கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகள் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிக அளவில் புதிதாக கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸின் தன்மை அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
‘டெல்டாக்ரான்’ வைரஸ்:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்கள் இதுவரை இல்லாத அளவிற்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த வகையில், அதிக வீரியத்துடன் பரவிய டெல்டா வகை மாறுபாடு தான் அதிக ஆபத்தை அளித்தது. ஆனால், அதன் பரவும் தன்மை மற்ற வகை மறுபாட்டினை ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது.
Exams Daily Mobile App Download
இதேபோல், அதற்கு அடுத்து பரவிய ஓமைக்ரான் வகை குறைவான ஆபத்தை ஏற்படுத்தினாலும் அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருந்தது. இதேபோல் பலவகையான மாறுபாடுகள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்டாவை போன்ற அதிக ஆபத்து மற்றும் ஓமைக்ரானை போல் அதிக வேகத்தில் பரவும் தன்மை என்ற கலவையான ‘டெல்டாக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உச்சகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.. தலைநகர் டெல்லியில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்!!
Follow our Instagram for more Latest Updates
இந்தியாவில் இந்த வகையான வைரஸ்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த வைரஸ் உலக நாடுகளில் பரவி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ‘டெல்டாக்ரான்’ வைரஸ் மாறுபாட்டின் தாக்கத்தால், டெல்டா வகை வைரஸை போல் மனிதர்களின் நுரையீரல் பாதிப்படையும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.