தமிழகத்தில் மக்களுக்கான புதிய எச்சரிக்கை அறிவிப்பு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொற்று விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட கொரோனா 3ம் அலைக்கு பிற்பாடு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு முந்தைய நாட்களில் இருந்தது போல இயல்பாக தங்களது பணிகளை செய்ய துவங்கினார்கள். இந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா 4ம் அலைப்பரவல் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதனை கவனத்தில் கொண்ட தமிழக அரசு பொது மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தது. அந்த வகையில் மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்ட நிர்வாகங்கள், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகளவு பதிவாகி வருவதால் பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று மாநகர நிர்வாகம் வலியுறுத்தி இருக்கிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச வேன் வசதி – அரசு முடிவு!
அதாவது, கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் அதிகளவு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடை ஊழியர்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் வணிக நிறுவனங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியமாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.