தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ் – 282 குழந்தைகள் பாதிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ் - 282 குழந்தைகள் பாதிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ் - 282 குழந்தைகள் பாதிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ் – 282 குழந்தைகள் பாதிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் மக்கள் கொரோனா வைரஸ், குரங்கு அம்மை நோய்களில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் வேளையில் அடுத்த தாக்குதலாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்புளுயன்சா காய்ச்சல்:

தமிழகத்தில் கடந்த மாதம் வரை கொரோனா தொற்று சற்று அதிகரித்த நிலையியேலேயே இருந்தது. அதனை முழுமையாக ஒழிக்கும் முயற்சியில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி 2 டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் குரங்கு அம்மை தொற்று அச்சமும் நிலவியது. இந்தியாவில் இந்த நோய் மக்களை தாக்க தொடங்கி விட்டதால் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். தற்போது பரவி வருவது இன்புளுயன்சா காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவரை தமிழகத்தில் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகள் அதனால் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – செப் 21 முதல் பயிற்சி வகுப்புகள்!

Exams Daily Mobile App Download

இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கு தான் அதிகம் பரவுகிறது. அதனால் காய்ச்சலுக்கான அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகளை தள்ளி வைப்பது நல்லது. கடந்த ஒரு மாத காலமாக வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எப்போதும் மழை காலங்களில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கும் அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முககவசம் அணிய வேண்டும் என்றும் நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!