இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய வகை ஹைட்ரஜன் பேருந்து – புனேவில் இயக்கம்!
இந்தியாவில் எரிபொருள் தேவையை குறைக்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும் ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய இணையமைச்சர் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகரில் தொடங்கி வைத்துள்ளார்.
ஹைட்ரஜன் பேருந்து:
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாதலின் விளைவாக பொது போக்குவரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரம் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. போக்குவரத்துக்கு பயன்படும் எரிபொருள் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும் பகுதி தொகை கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு செலவிடப்படுகிறது. அதே நேரம் போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்கிறது.
அதாவது டீசலில் இயங்கும் ஒரு பேருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதனால் காற்று மாசுபாடு அடைந்து மனிதர்கள் சுவாச கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மாற்றாக மத்திய அரசு மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் புனேவில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் – அண்ணா பல்கலை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு செல் என்பது ஹைட்ரஜன் மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்துக் கொள்ளும் அதன் மூலமாக பேருந்து இயங்கும். மேலும் இந்த ஹைட்ரஜன் பேருந்து முழுக்க முழுக்க தண்ணீரையும் காற்றையும் மையப்படுத்தி இயங்குவதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் டீசலை விட இதன் செலவும் மிக குறைவு என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இந்தியாவில் போக்குவரத்தில் ஹைட்ரஜன் பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்