அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் அடுத்தடுத்து கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றினால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும் எண்ணிலடங்காத உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தற்போது நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாக திரும்பி கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே கொரோனாவின் இரண்டாம், மூன்றாம் அலைகளையும் மக்கள் கடந்து வந்துள்ளனர். மேலும் நம் தமிழக அரசானது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடையுமாறும் வழிவகை செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அடுத்தடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக உருமாற்றமடையும் கொரோனா மக்களிடையே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க கூடும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இனிமேல் உருமாற்றம் அடையும் கொரோனா பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகளை நாம் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – அனைத்து பள்ளிகளும் வரும் 24-ந் தேதி வரை மூடல்! முக்கிய உத்தரவு!
அடுத்து வரக்கூடிய கொரோனா அலைகள் வேகமாக பரவக்கூடியதாகவும், தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு திறனை தவிர்க்க கூடியதாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்றும் உலக வங்கியின் மூத்த ஆலோசகர் பிலிப் ஷெல்கென்ஸ் கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா பரவல் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பெரிய நாடுகளில் அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே பிஏ.4 மற்றும் பிஏ.5 வகை கொரோனா உலகில் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அதிகளவு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.