தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் – ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவு!
தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான செய்திகளை இப்பதிவில் காண்போம்.
உயர்நீதிமன்றம் :
தமிழக பள்ளி கல்வித் துறை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளியில் காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப உத்தரவிட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், என மூன்று வகையாக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்கள் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.10,000, முதுநிலை ஆசிரியர்கள் ரூ.12,000 என்ற அடிப்படியில் பணியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
இந்த பணி நியமனங்களை அந்தந்த பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளவேண்டும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பியதுடன் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC யின் எச்சரிக்கை பதிவு!
இந்த நிலையில் தற்காலிக பணி நியமனம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி முன்பு பட்டியலிட மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.