தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் புதிய மருத்துவ செயலி – கவுன்சில் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் புதிய மருத்துவ செயலி - கவுன்சில் அறிவிப்பு!
தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் புதிய மருத்துவ செயலி - கவுன்சில் அறிவிப்பு!
தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் புதிய மருத்துவ செயலி – கவுன்சில் அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், மருத்துவர்களை கண்டறியும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் செயலி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செயலி:

நாட்டில் எத்தனை சேவைகள் இருந்தாலும் மருத்துவ சேவை என்பது மிகவும் போற்றுதலுக்குரிய சேவையாகும். இந்தியாவில் மக்கள் சேவை ஆற்ற பல துறைகள் இருந்தாலும் மருத்துவத் துறைக்கு ஈடாகாது. ஏனென்றால் வளரும் நாட்டில் புதிது புதிதாக நோய்களும் வளர்ந்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்னும் பெருந்தொற்று மக்களிடையே பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோயினை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும், அரசாங்கமும் மிகவும் போராடியது. இந்நிலையில் மருத்துவர்கள் இரவு பகல் பாராது நோயினை கட்டுப்படுத்த தீவிர முயற்சி செய்தனர்.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் கொரோனா காலத்தில் அரசுடன் சேர்ந்து மருத்துவர்களும் மக்களுக்காக அயராது உழைத்தனர். நாட்டில் வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியில் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தும் கிடைக்கும் விதமாக தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்கள் பற்றிய தகவலை தொலைபேசி செயலியின் மூலமாக தெரிந்து கொள்ளும் விதமாக புதிய செயலி ஒன்றை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் இது போன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – இன்றே (ஜூலை 29) கடைசி நாள்

அதன்படி ‘search for doctor app’ என்ற செயலி மூலம் அஞ்சல் குறியீடு எண் வசிப்பிட பகுதியை வைத்து தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். மேலும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர்கள் எந்தெந்த துறைகளில் வல்லுநர்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 1.60 லட்சம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். தற்போது இந்த செயலியில் 80,000 மருத்துவர்கள் இணைந்துள்ளனர். கொரோனா காலத்தில் இந்தியாவில் அதிகமான போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் இந்த செயலியின் மூலம் மக்கள் தகுதி வாய்ந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர். கே.செந்தில் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!