தமிழகத்தில் ஆசிரியர் குறைகளை தெரிவிக்க புதிய வழிமுறை – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிய புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதில் தெரிவிக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதே போல் மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்கின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தன. இதனால் மாணவர்களின் கற்கும் திறனும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது தொற்று குறைய தொடங்கியதால் பள்ளிகள் நேரடியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கிலும், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், பாடங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அடுத்து தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழக அரசு ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரிய பெருமக்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காக தான் ஆசிரியர் மனசு பெட்டி எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கடைக்கோடியில் இருக்கும் ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை எளிதில் தெரிவிக்கும் விதமாக [email protected], aasiriyarkaludananbil@gmail.