இந்தியாவில் 75வது சுதந்திர தினவிழாவை சிறப்பிக்க புதிய ஏற்பாடு – பிரதமர் அறிவிப்பு!
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதற்கான வேலைப்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினவிழா:
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75வது சுதந்திர தினவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. தற்போலிருந்தே சுதந்திர தினவிழாவிற்கான முன்னேற்பாடு பணியினை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுதந்திர தினத்தையொட்டி சமூக வலை பக்கங்களில் அனைவரின் முகப்பு படத்திலும் தேசிய கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார்.
Exams Daily Mobile App Download
அதே நேரத்தில், மோடியும் அவரது சமூக வலைதள முகப்பு படத்தில் தேசிய கொடியை வைத்துள்ளார். அதே போல நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் அனைவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றும்படி மோடி அறிவித்துள்ளார். மேலும், வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 30% குறைவான Freshers? முக்கிய தகவல் வெளியீடு!
அதாவது, 75வது சுதந்திரத் தினவிழாவை சிறப்பிக்கும் விதமாகவும், தேசியப்பற்றை வெளிப்படுத்தும் விதமாகவும் வரும் ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும் இது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.