தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் திறனை கண்காணிக்க புதிய செயலி – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனை கண்காணிக்க புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த செயலி மூலமாக அனைத்து திறனையும் கண்டுபிடித்து பயிற்சிகள் வழங்கவுள்ளனர்.
பள்ளி மாணவர்:
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பலவிதமான சலுகைகள் தமிழக அரசின் சார்பில் செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பள்ளி மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறும் போதே அனைத்து திறன்களையும் கற்று தேர்ந்திருக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. அதற்காக சில புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறியும் பொருட்டு ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, நேற்று திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலகத் திறனாய்வு உடன் திறன் தேர்வு போட்டியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது, மாணவர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளங்க வேண்டும் எனவும், மாணவர்களின் விளையாட்டு திறனை அறியும் பொருட்டு ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதாவது, இந்த செயலி மூலமாக மாணவர்களின் செயல்திறன், ஆர்வம் அனைத்துமே கண்காணிக்கப்படும்.
தமிழகத்தில் பேருந்துகளில் செல்போன் உபயோகிக்க தடை – அரசு அதிரடி உத்தரவு!
அதன் பின்னர், இதில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து எந்த துறையில் மாணவனுக்கு ஆர்வம் இருக்கிறது, என்னென்ன பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை கூராய்ந்து அதற்கான பயிற்சி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.