இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க.. 60 ஆண்டுகளுக்கு பின் வானில் நிகழும் அதிசயம் – நாசா அறிவிப்பு!
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கோள், வருகிற செப். 26 ஆம் தேதி வானில் தோன்றும் என நாசா அறிவித்துள்ளது. 59 ஆண்டுகளுக்கு பின் இந்த நிகழ்வானது நடைபெற இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிய காட்சி:
சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக வடிவில் மிகப் பெரிய கோள் வியாழன். இந்த கோள் சூரிய குடும்பத்தின் ஐந்தாவது கோளாகும். இந்த கோளானது நமது பூமியை போன்று 1300 மடங்கு பெரியதாகும். பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் இருப்பது போல வியாழன் கோளிற்கு 86 சந்திரன்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் வியாழன் கோளின் வளையங்கள் இருக்கின்றன.
இந்த பிரமாண்ட கோள் தான் வருகிற திங்கள்கிழமை (செப் 26) பூமிக்கு அருகே வர இருக்கிறது என நாசா தெரிவித்துள்ளது. 59 ஆண்டுகளுக்கு பின் இந்த அரிய நிகழ்வானது நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழ் திசையில் வியாழன் எழுகிறது. அவ்வாறு எதிர் எதிர் திசையில் இது நிகழும் போது பூமிக்கு நெருக்கமாக வரும் வியாழன் கோள் வானில் தோன்றும்.
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5ஜிபி இலவச டேட்டா – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த கோளானது பூமியில் இருந்து சுமார் 905 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். ஆனால் இந்த அரிய நிகழ்வானது நடைபெறும் போது இரு கோள்களுக்கும் இடையே உள்ள தொலைவானது 365 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவாக குறைய இருக்கிறது. இதுக்கு முன்னதாக 1963 ஆம் ஆண்டு இது போன்ற நிகழ்வு வானில் நிகழ்ந்து இருக்கிறது. தற்போது 59 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிகழ இருக்கும் இந்த அரிய நிகழ்வை பைனாகுலர் மூலமாக பார்க்கலாம். அப்போது வியாழன் கோளின் 4 சந்திரன்களை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்