அதிரடியாக முடிவுக்கு வரும் முக்கிய ப்ரைம் டைம் சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மிகவும் அதிக அளவிலான ரசிகர்களை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஜீ தமிழ் சேனலின் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிவிற்கு வர இருக்கிறது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்:
சமீபத்தில் தான் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் ஜீ தமிழ் சேனலின் டாப் சீரியல் ஆகும். இந்த சீரியலில் நடிகை தேவயானி புது கோணத்தில் புது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து அதிக வரவேற்பை பெற்ற தொடராக புதுப்புது அர்த்தங்கள் உள்ளது, கத்தியின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக விலகி வரும் நிலையில், கதை முடிவை நோக்கி நகருவதாக ரசிகர்கள் யூகிக்க தொடங்கி இருந்தனர்.
Exams Daily Mobile App Download
அதேபோல் , இரவு 9: 30 மணிக்கு ப்ரைம் டைமில் வரும் புது புது அர்த்தங்கள் தொடர் நவம்பர் 13ம் தேதியோடு முடிவடைய உள்ளது. அதாவது அடுத்த 2 வாரங்களில் இந்த சீரியல் முடிந்து கிளைமாக்ஸ் வர உள்ளது. தேவயானிக்கு உண்மைகள் அணைத்தும் தெரிந்து விட்டது. இன்னும் சில விஷயங்கள் மட்டுமே முடிவிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. புது புது அர்த்தங்கள் சீரியல் முடிய உள்ளதால் அதன் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.