விஜய் டிவி சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முக்கிய நடிகர் – இனி இவருக்கு பதில் இவர்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான “ஈரமான ரோஜாவே 2” தொடரில் தற்போது புதிதாக கதாபாத்திரம் ஒன்று மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கதாநாயகனின் அப்பா கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில், தற்போது கதாநாயகியின் அப்பா கதாபாத்திரமும் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரமான ரோஜாவே 2:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஒரு சில சீரியல்களின் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கி அதுவும் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே 2 சீரியல். சென்ற வாரம் இந்த சீரியலில் பல திருப்பங்கள் நடந்து முடிந்துள்ளது. ஜீவா தன்னை பிடிக்காமல் இருப்பதை தெரிந்து ப்ரியா மிகவும் வருத்தப்படுகிறார்.
Exams Daily Mobile App Download
மேலும் காவ்யா, பார்த்திபனை பிரிக்க வேண்டும் என பார்வதி குறிக்கோளுடன் இருக்கிறார். இந்த வாரம் ஆடி மாதம் என்பதால் பிரியாவும், காவ்யாவும் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளது போலவும், காவ்யாவை பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் சுவர் ஏறி குதித்து பார்த்திபன் வருவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டது. அதாவது ஜீவா பார்த்திபனின் அப்பா கதாபாத்திரம் மாற்றப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் தற்போது வெளியான தகவலின் படி மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது ப்ரியா, காவ்யாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மனோகரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தெய்வமகள் சீரியலில் குமார் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் தான் புதிதாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டாப் சீரியலில் இப்படி தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.