ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை வீரர் – சொந்த ஊரில் நல்லடக்கம்!
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மதுரை வீரர் வீர மரணமடைந்துள்ளார். அவரின் உடல் சொந்த ஊருக்கே கொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நல்லடக்கம்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜெளரி என்ற ராணுவ முகாம் மீது கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அந்த தாக்குதலில் மரணமடைந்தவரில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவராவார். கடந்த 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த லட்சுமணனின் உடல் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு விமானம் மூலமாக இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், மதுரை விமான நிலையத்தில் வைத்தே அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கு பிறகு லட்சுமணனின் உடல் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த லட்சுமணனின் உடல் அவரின் வீட்டில் 10 நிமிடங்கள் வைக்கப்பட்டது. இதற்கு பிறகு லட்சுமணனுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு – இடைக்கால தடை!
Exams Daily Mobile App Download
இதற்கு பிறகு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் லட்சுமணனின் உடல் அவரின் சொந்த இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. பின்னர், லட்சுமணனின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், லட்சுமணனின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தார்கள் என பலரும் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். லட்சுமணனின் இறப்பு அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.