மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கோரிக்கை… DA நிலுவை தொகை எப்போது?
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை கொரோனா காலத்தில் செலுத்தாமல் நிலுவையில் வைத்தது. தற்போது இந்த நிலுவை தொகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நிலுவை தொகை:
மத்திய அரசு, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கிய சமயத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து வந்தது. மேலும், தொழில்கள் அனைத்தும் முடங்கியிருந்ததால் வருவாய் தட்டுப்பாடு ஏற்பட்டு, அரசுக்கு பொருளாதார சிக்கல் இருந்தது.
இதனால் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொகையை கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை செலுத்தாமல் நிலுவையில் வைத்தது. ஆனால், அதன்பிறகு உள்ள தவணைகளுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஜூலை 1-ம் தேதி முதல் தான் வழங்கப்பட்டது. நிலுவையில் இருந்த காலத்திற்கான தொகை வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்ந்து அரசு நிலுவை தொகையை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
உலகளவில் 65.42 கோடியை தாண்டிய கொரோனா மரணங்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி நிலுவை தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்