மத்திய உளவுத்துறையின் முக்கிய எச்சரிக்கை – தமிழகத்தில் இவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! உஷார்!
இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய உளவுத்துறை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
உளவுத்துறை:
இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்ற சாட்டுகள் எழுந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் ஒன்றிய அரசு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து பாஜக கட்சி அலுவலர்களை குறி வைத்து கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியது. இதனை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் பரபரப்பு அதிகரித்தது. இதற்கு மத்தியில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினர். இந்த நிலையில் மத்திய உளவுத்துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிகரித்த FD வட்டி விகிதம்!
Exams Daily Mobile App Download
அதாவது தமிழகம் மற்றும் கேரள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் 9 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் காவல் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்