வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு.. தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் பல்கலைக்கழகம் சார்பாக நாளை (செப்.24) வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலை இல்லாதவர்கள் பயன் பெற்று வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது ஒரு மாதத்தில் 2 வாரங்களிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று இந்த முகாம்களில் தகுதியுடைய நபர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பாக அங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு செப்டம்பர் 24ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
WhatsApp Update: இனி ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட்ஸ்.. ஆகா இது ரொம்ப புதுசா இருக்கே!
Exams Daily Mobile App Download
இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளனர். அதனால் தற்போது பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோர் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்