உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் தொற்று.. 65.38 லட்சம் பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 65.38 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பிறகு இந்த வைரஸானது 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கியது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த நிலையில் மருத்துவ வசதி கொண்ட வளர்ந்த நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டன. உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் பன்மடங்காக அதிகரித்தது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.38 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உளள்து. அதனை தொடர்ந்து சுமார் 599,347,959 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 40,146 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு, தடுப்பூசி, நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவைகள் பின்பற்றப்பட்டு வரும் வேளையிலும் வைரஸானது முழுமையாக ஒழிந்தபாடில்லை.
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – சூப்பரான சேமிப்பு திட்டம்! முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
தொடர்ந்து உருமாற்றம் அடைந்து அடுத்த நிலைக்கு சென்று அதன் வீரியம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுக்க மக்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது. அனைத்து நாடுகளும் தனது மக்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்