தமிழகத்தில் விரைவில் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியது. பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொது மக்கள் அவசியமில்லாமல் பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பொது மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதாலும், கொரோனா தடுப்பூசிகள் பலனாலும் தான் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. இதனால் அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய தேவையில்லை. மேலும் விருப்பத்தின் பேரில் அணிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் சுதந்திரமாக பொது இடங்களில் நடமாட துவங்கினர். இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறை!
கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே செல்வதால் மீண்டும் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கத்திற்கும் மாறாக டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பரவி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா ஓரிரு இடங்களில் பரவி கொண்டிருப்பதால் கண்டிப்பாக முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கை அமைப்படுத்தலாமா என முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.