தமிழகத்தில் நாளை (ஜன.16) முழு ஊரடங்கு அமல் – போலீசார் தீவிர கண்காணிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜன.16) இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் நாளை 1,500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்குடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்தார். கடந்த 6ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொது போக்குவரத்து மற்றும் கடைகள், அலுவலங்கள் முழுவதும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் ஜன.9ம் தேதி ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நாளை (ஜன.16) இரண்டாம் வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆங்காங்கே சோதனை மையங்கள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர். அதனால் பொதுமக்கள் தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜு – ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் அன்றைய தினம் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். முழு ஊரடங்கு நாளில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு மறுநாள் பொங்கலுக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மீண்டும் பணிக்கு செல்ல ஏதுவாக ஜன.17 ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.