சொத்தை பிரிங்க.. சல்லி சல்லியாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – இடிந்து போன மூர்த்தி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி தன்னுடைய பூர்வீக வீட்டை மீனாவின் அப்பாவிடம் விற்றுவிட, அதில் ஜனார்த்தனன் பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில், முல்லை அம்மா பார்வதி, வீடு விற்ற காசில் கதிர் பங்கை கேட்டு சண்டை போடுகிறார். இதெல்லாம் அடுத்த எபிசோடில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி சிறு வயது முதல் வளர்ந்த தன்னுடைய பூர்வீக வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வீட்டை யாரிடம் கொடுப்பது என குழப்பத்தில் இருக்க மீனாவின் அப்பா பணம் கொடுத்து வீட்டை வாங்க தயாராக இருக்கிறார். அதற்கு மீனாவும் சப்போர்ட் செய்ய மூர்த்தி வீட்டை கொடுக்க முடிவு செய்கிறார். இந்நிலையில் குடும்பத்துடன் மூர்த்தி பத்திர அலுவலகத்திற்கு வர அங்கே மீனாவின் அப்பா பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைக்கிறார்.
அதாவது மூர்த்தி வீட்டை மீனாவின் பெயரில் அவர் வாங்குகிறார். இந்த விஷயம் தெரிந்து குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் அந்த நேரத்தில் ஒன்றும் அவர்களால் பேச முடியவில்லை. வெளியே வந்து ஜீவா இது பற்றி ஜனார்தனனிடம் கேட்க நான் என்னுடைய சொத்து முழுவதையும் என் மகள் பெயரில் தான் வாங்குவேன் என சொல்லி சமாளிக்கிறார். இந்நிலையில் இந்த விஷயம் முல்லை அம்மா பார்வதிக்கு தெரிய வருகிறது.
என்னை மன்னிச்சுரு இனியா.. இனி மயூ தான் எனக்கு உலகம் – பெத்த மகளின் தலையில் குண்டை போட்ட கோபி!
Exams Daily Mobile App Download
அவர் கதிருக்கு தெரியாமல் மூர்த்தி வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார். என் மாப்பிள்ளையை வெளியே அனுப்பி விட்டு வீட்டை மீனா பெயரில் எழுதி வைத்துவிட்டீர்கள் என சொல்லி சண்டை போட, உடனே கோவப்பட்ட மூர்த்தி நான் வீட்டை விட்டு போகாதே என சொல்லியும் அவன் போனான். அவனுக்கு பணம் வேண்டும் என்றால் அவனை நேராக வந்து கேட்க சொல்லுங்கள் என கோவமாக பேசிவிடுகிறார். ஆனால் பார்வதி, கதிரின் பங்கு காசை இப்போதே கொடுக்க வேண்டும் என சண்டை போடுகிறார். அதெல்லாம் நாளைய எபிசோடில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்