12,000 ஊழியர்களை சத்தமில்லாமல் வேலையை விட்டு தூக்கிய பிரபல நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!
மெட்டா நிறுவனம் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக தனது ஊழியர்களில் 15% நபர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நீக்கம்:
உலகம் முழுவதும் தற்போது பொருளாதார மந்த நிலை அனைத்து துறைகளையும் வாட்டி வருகிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. மேலும், தற்போதைய நிலையை சமாளிக்க நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
பிசினஸ் இன்சைடர் வணிக செய்திகளின் அறிக்கையின் படி, மெட்டா நிறுவனம் தங்கள் மொத்த நிறுவனத்தில் இருந்து 15% பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சுமார் 15% பணியாளர்கள் அதாவது 12,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் யாருக்கு கிடைக்கும் – அரசாணை வெளியீடு! புதிய நடைமுறைகள் அமல்!
Exams Daily Mobile App Download
மேலும், சமீப காலமாக மெட்டா நிறுவனம் புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்வதையும் நிறுத்திவைத்துள்ளது. இந்த முடிவு மெட்டா நிறுவனத்தில் மட்டும் இல்லாமல், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எடுக்கப்பட்டு வருகிறது. நிறுவனங்களின் பொருளாதாரம், மந்த நிலையை அடைந்துள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்