சின்னத்திரையில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. காரணம் இதுவா? அவரே சொன்ன விளக்கம்!
தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் ராஜு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அரவிந்த். அவர் தற்போது இரு முக்கிய சீரியல்களில் நடித்து வரும் நிலையில், திடீரென அவர் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் அரவிந்த்:
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு சீரியல் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் தெய்வமகள் என்ற பிரபலமான சீரியலில் ராஜு கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அரவிந்த். அவர் பல சீரியல்களில் குணசித்திர நடிகராக நடித்து வரும் நிலையில், தற்போது ஜீ தமிழ் சேனலில் நினைத்தாலே இனிக்கும், வித்யா நம்பர் 1, உள்ளிட்ட சீரியல்களில் அவர் நடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
மேலும் அவர் கலைஞர் டிவியில் கூட ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் வித்யா நம்பர் ஒன் சீரியலில் அவருடைய கதாபாத்திரத்தில் 2 வாரங்களுக்கு முன் நடிகர் வசந்த் என்பவர் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் அவருடைய காதாபாத்திரம் காட்டப்படாமல் இருந்து வருகிறது. அதனால் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
சன்டிவியின் முக்கிய சீரியலில் நடந்துள்ள அதிரடி மாற்றம் – இனி இவங்க தான் புது நடிகையா?
Follow our Instagram for more Latest Updates
அதாவது அவருக்கு சிறிய விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது ரொம்ப மோசமாகி ஆப்ரேசன் செய்துள்ளதால் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலைமை இருப்பதால் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியவில்லை என அவரே விளக்கம் கொடுத்து இருக்கிறார். வித்யா நம்பர் ஒன் சீரியலில் அவருடைய கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், நினைத்தாலே இனிக்கும் சீரியலில் அவர் சில மாதங்களுக்கு பின் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.