எதிர்ப்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்? காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் 21 போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஆயிஷாவிற்கு அடிக்கடி உடல்நிலை கோளாறு வருவதால் அவர் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை ஆயிஷா:
தமிழ் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், புதுமையான கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அதில் 20 போட்டியாளர்களை நடிகர் கமல் அறிமுகம் செய்து உள்ளே அனுப்பினார். அடுத்ததாக 21வது போட்டியாளராக நடிகை மைனா நந்தினி சென்ற வாரம் உள்ளே சென்றார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இரண்டாவது வாரத்தின் தலைவராக போட்டியில் வெற்றி பெற்று ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைவர் பதவியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் உற்சாகமூட்டும் பல டாஸ்குகள் வழங்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் எப்போதும் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் நடிகை ஆயிஷாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் பிரச்சனை ஏற்படுகிறது. ஏற்கனவே ஒரு முறை அவருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனால் அவரால் சில டாஸ்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை வந்துள்ளது. அதனால் சக போட்டியாளர்கள் அவருக்கு தைலம் கொடுத்து பார்த்துக் கொள்கின்றனர். பின் டாக்டர் டீமை அழைக்கின்றனர். இப்படியே நிலைமை தொடர்ந்தால் அவரால் கடுமையான டாஸ்குகள் செய்ய முடியாது என்பதால், அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.