ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தோருக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். இந்நிலையில் இந்த தேர்வை முடித்தவர்கள் மீண்டும் ஒரு போட்டித் தேர்வை எழுத வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
போட்டித் தேர்வு:
அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் ஈடுபடுபவர்களின் தகுதியை நிர்ணயிக்க டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் டெட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. மேலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதுக்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். இருப்பினும் கடந்த ஆண்டு, 7 ஆண்டு கால அவகாசம் வாழ்நாள் முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டு என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
கோபியை கண்டபடி கேள்வி கேட்டு வெளுத்து வாங்கும் பாக்கியா, ஆதரவளிக்கும் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
கடந்த 2012ம் ஆண்டு டெட் தேர்வை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் 2013 ,2017 மற்றும் 2019 ஆகிய 3 ஆண்டுகள் மட்டுமே தேர்வினை தமிழக அரசு நடத்தியது. மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 90 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். மேலும் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது.
Exams Daily Mobile App Download
இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10,371 ஆசிரியர், பேராசிரியர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆசிரியர் தகுதித் தேர்வுவை (TET )முடித்தவர்களுக்கு, வேலை பெறுவதற்கு மற்றொரு போட்டித்தேர்வு நடைபெறும் என்றும், வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு நடைபெறும் என்றும்” குறிப்பிடப்பட்டு உள்ளது.