விஜய் டிவியில் முன்னணி சீரியலான “ராஜா ராணி 2” சீரியலில் நடந்த மாற்றம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையுடன் சந்தியா இருக்க ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் படிக்காத சரவணனை கல்யாணம் செய்து கொள்கிறார். சந்தியாவை புரிந்து கொண்டு சரவணன் படிக்க வைக்க நினைக்க ஆனால் சரவணனின் அம்மா சிவகாமி சந்தியாவின் லட்சியத்திற்கு தடையாக இருக்கிறார்.
மறுபக்கம் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருப்பதால் சந்தியாவின் கனவு நினைவாகமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த வார எபிசோடில் சந்தியா தன் பேச்சை மீறி படிப்பு பக்கம் செல்வதை விரும்பாத சிவகாமி அவருக்கு வந்த ஹால்டிக்கெட்டை எடுத்து மறைத்து வைக்கிறார். அனைவரும் ஹால் டிக்கெட் வந்ததை சொல்ல சந்தியா எனக்கு மட்டும் ஏன் வரவில்லை என நினைத்து குழப்பத்தில் இருக்க, சரவணன் எப்படியாவது நீங்க எக்ஸாம் எழுத வேண்டும் என சொல்ல, சிவகாமி அவர் எக்ஸாம் எழுதுவாரா என்பது பற்றி நான் தான் முடிவு செய்வேன் என சிவகாமி சொல்கிறார்.
சிவகாமி ஹால் டிக்கெட்டை மறைத்து வைத்ததை பார்த்து அவருடைய கணவருக்கு சந்தேகம் வருகிறது. அவர் உண்மையை கண்டுபிடிப்பாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மேலும் இதுவரை வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியல், இனி வாரத்தில் 6 நாட்கள் சனிக்கிழமையும் இரவு 9.30 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வரும் என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.