காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர் … தொடங்கும் அவசர கால நடவடிக்கை!
தலைநகர் டெல்லியில் காற்றின் மாசுபாடு என்பது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
காற்று மாசுபாடு:
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்றின் தரம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சமீப காலமாக மிகவும் மோசமான விளைவுகளை இவை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் காற்றை மக்கள் சுவாசிப்பதற்கு ஏற்றவாறு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். மக்கள் அதிகம் வசிக்கும் டெல்லியில், வாகன புகையால் ஏற்படும் மாசுவை குறைக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
Youtube பயனர்களுக்கான ஹாப்பி அப்டேட் – இனி எளிதாக வீடியோவை zoom செய்யலாம்!
Exams Daily Mobile App Download
தற்போதைய நிலையில், டெல்லியில் காற்றின் தரம் AQI 406 என்ற மிக கடுமையான நிலையை அடைந்துள்ளது. இதனால் டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமையான இன்று, இந்த மோசமான நிலைக்கு மக்கள் தான் கரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், வீட்டில் இருந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும், தனிநபர் வாகனங்களை பயன்படுத்துவை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.